🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வானது  பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர்  அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் பங்களிப்புடன் இன்று (10.06.2026) துறைநீலாவணை மாரியம்மன் வளாகத்தில்  இடம்பெற்றது.

🍃 இதன் போது  உதவி பிரதேச செயலாளரினால் "பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்  விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.

🍃 இந்தநிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,  பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

🍃 இந்த சுற்றாடல் தின  நிகழ்ச்சித்திட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மரநடுகை நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச  குடியரசின் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க  அவர்களினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும்  தொனிப்பொருளில்  ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் " நிகழ்வின்  மண்முனை  தென்  எருவில்பற்று  பிரதேச செயலக பிரிவின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர்  அவர்களின்  தலைமையில் இன்றைய தினம் (02.06.2026) மகிழுர்முனை  மண்டபத்தடி வலம்புரி ஆலயத்துக்கு அருகாமையில் இடம் பெற்றது.

💥 இலங்கையின் பல்பரிமாண வறுமையினை ஒழிக்கும் பொருட்டு  25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி  திட்டங்களை செயற்படுத்தல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

💥 இந்த  திட்டத்தின்  கீழ் மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகத்துக்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மகிழூர்முனை  விவசாய வீதி 8.25 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீட்  வீதியாக செப்பனிடப்படவுள்ளது.  

💥 மேலும் குருமண்வெளி 11 கிழக்கு,  களுதாவளை 04  சாந்திபுரம்  மற்றும்  தேற்றாத்தீவு  தெற்கு  கிராம  சேவகர்  பிரிவுகளை சேர்ந்த 03 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் செப்பனிடப்படவுள்ளது.  

💥 இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச சபை தவிசாளர் கௌரவ மே. வினோராஜ், பிரதேச செயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர் திரு. செ பிரபாகரன், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழு தலைவர்கள், மகிழூர் கிராம சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும்  கலந்து  கொண்டிருந்தனர். 

💥 மேலும்  நிகழ்வின் இறுதியில் மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில் 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியம் உரித்தற்ற மக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க செய்யும் சமூக திட்டமhகும். இதற்காக 2019 ம் ஆண்டு தேசிய விருதினையும் 2020 ம் ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினையும் மற்றும் 2021 ம் ஆண்டு; தேசிய விருதினையும் பெற்றுள்ளது.
 
பொதுமக்களை சென்றடைய வழிகாட்டல்களும், இலக்குகள் நிர்ணயமும் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்ட உத்தியோகத்தர்களின் விடாமுயற்சியினாலும் தற்போதே மக்கள் அதன் பலனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.உணர்ந்து பங்காற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களனாலேயே  இத்தகைய தேசிய விருதுகள் சாத்தியமாகியுள்ளது. அவர்களுக்கு இவ் விருதுகளை சமர்ப்பிப்பதில் பிரதேச செயலகம் பெருமையடைகின்றது.
 
FB IMG 1665460512434FB IMG 1665460515851FB IMG 1665460509664

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

💎 21.04.2024 எருவில் தெற்கு கிராம உத்தியோகத்த பிரிவில் கோடைமேடு கிராமத்தில் உத்தியோகபூர்வமாக அரிசி விநியோகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக திரு பூ. பிரசாந்தன் கலந்து கொண்டார். 15748 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில் 29.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமாக இந் நிகழ்வு ஒழுங்மைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை,  மார்கழி ஆகிய மாதங்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.    
 
அதற்கமைவாக எமது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் கலைவாணி பாலர் பாடசாலையில் இத்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.      
 
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.நிர்மல்ராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு மு.உதயகுமார், முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி அ.சீவரெட்ணம், பிரிவுக்கான மருத்துவ மாது மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
FB IMG 1665644377725         FB IMG 1665644374088    FB IMG 1665644364482  FB IMG 1665644362597

News & Events

14
ஜூன்2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ஜூன்2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
மே2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
நவ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

குடியுரிமை சாசனம்

News & Events

14
ஜூன்2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ஜூன்2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
மே2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
நவ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

11
நவ2022
முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ஜூன்2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
ஏப்2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
மார்2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top