🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் பங்களிப்புடன் இன்று (10.06.2026) துறைநீலாவணை மாரியம்மன் வளாகத்தில் இடம்பெற்றது.
🍃 இதன் போது உதவி பிரதேச செயலாளரினால் "பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.
🍃 இந்தநிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
🍃 இந்த சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மரநடுகை நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு









