Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
“ துருலிய லங்கா” தேசிய மர நடுகை வேலைத்திட்டம் - (06.11.2020) "
"வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" எண்ணக்கருவின் கீழ் “ துருலிய லங்கா” தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு 2020.11.06 அன்று எமது மதிற்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி, வட்ட விதானையார் மற்றும் பட்டதாரி பயிலுனர் போன்றோர் பங்குபற்றினர்.
கிராம உத்தியோகத்தர் தலைமையில் பட்டதாரி பயிலுனர்கள் ஒத்துழைப்புடன் 800 பனைமரக்கன்றுகள் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை வரை நடப்பட்டது.

பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கொரோணா செயலணி தொடர்பான கலந்துரையாடல். 2020.10.27
பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கொரோணா செயலணி தொடர்பான கலந்துரையாடல். 2020.10.27
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா நோய்த்தொற்று காரணமாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதேச கொரோணா செயலணி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றுப்பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , சனநடமாட்டம் அதிகமான இடங்களை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகள் பேணப்படல் வேண்டும் எனவும் தவறுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துதல் மற்றும் ஆலயங்களில் பூசை வழிபாடுகளின்போது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


மனைப்பொருளாதார போசனையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் 2020/2021 பெரும்போகம் - 26.10.2020
மனைப்பொருளாதார போசனையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் 2020/2021 பெரும்போகம் - 26.10.2020
ஜனாதிபதி செயலணி மூலம் மனைப்பொருளாதார போசணையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மனை அலகுகளுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளார் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி எருவில் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுக்கு இணைப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டு கன்றுகளை வழங்கி வைத்தனர்.


பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான வேலை ஆரம்ப நிகழ்வுகள் 2020.01.01
பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான வேலை ஆரம்ப நிகழ்வுகள் 2020.01.01
மலர்ந்திருக்கும் 2020ஆம் ஆண்டினை வரவேற்று அலுவலக கடைமைகளை ஆரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களினால் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் புதுவருட ஒன்றுகூடலின் போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் 3ம் இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டமைக்காக அதற்காக அயராது பாடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைகளை பாராட்டும் வைபவம், தாங்கள் ஆற்றிய சேவைகளுக்காக மாதாந்தம் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை பாராட்டும் வைபவம், சமூக பாதுகாப்பு நிதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைப்பு செய்தவர்களை பாராட்டும் வைபவம் என்பன பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.
புதுவருட கடைமைகளை ஆரம்பிக்கும் பொருட்டு ' விசேட மரநடுகை வேலைத்திட்டமானது இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.










