Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவும் எழுவான் சிறப்பு மலர் வெளியீடும்
மண்
முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவானது 23.10.2018ம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணியளவில் களுதாவளை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகியது.
இக் கலாசார விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனும் கௌரவ அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி ஞா.தில்லைநாதனும் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் களுதாவளை கல்லடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தேற்றாதீவு தேனுகா கலைக் கழகத்தின் தமிழ் கலாசார வாத்திய குழுவினர் அதிதிகளை வரவேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. இதன்போது தமிழ்தாய் வாழ்த்தினை திருவருள் நுன்கலை மன்றமும், கலாசார கீதத்தை தேனுகா கலைக்கழகத்தினாலும் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் நிகழ்த்தியதுடன் வரவேற்பு நடனத்தினை பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் நிகழ்த்தினர்.
இவ் விழாவின் தலைமை உரையை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நிகழ்த்தி வைத்தார். கிராமிய இசையை களுதாவளை மகா வித்தியாலய மாணவிகளும் குறவன் குறத்தி நடனத்தினை களுதாவளை நிருத்திய கலா மன்ற மாணவியரும் ஆற்றுகைப் படுத்தினர். எழுவான் சிறப்பு மலரினை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமரிடம் கையளித்தார்.
இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மூத்த, இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசாரப் பேரவையால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயம்.


2019ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு

2019ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு 01.01.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்கள், அரச பணியாளர்களுக்கென இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காரியாலய அரச சேவையாளர்கள்சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்று பிரதேச செயலாளரின் புத்தாண்டுச் செய்தி உரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சிவலிங்கம் சத்தியகௌரி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


இயற்கை அனர்த்தங்களுக்கெல்லாம் காரணம் மனிதர்களால் இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் பேரழிவுக்குக் காரணமாய் அமைகின்றன. - பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்.
இயற்கை அனர்த்தங்களுக்கெல்லாம் காரணம் மனிதர்களால் இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் பேரழிவுக்குக் காரணமாய் அமைகின்றன எனவே நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானங்களை இயற்கைக்கு ஏற்றவகையில் அமைப்பது, பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றன. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் 26.12.2018 புதன்கிழமை காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும். இவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முன்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை வழங்கி பாதுகாப்பு வழங்குவது பிரதேச செயலகத்தின் ஒவ்வோரு உத்தியோகத்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும்.
பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், பிரதானமாக கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது , முகங்கொடுப்பது போன்ற விடயங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக அனர்த்தம் என்று வரும்போதுஅனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றினைந்து பிரதேச மக்களை பாதுகாத்து காப்பாற்ற வேண்டியது எமது கடப்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந் நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரதேச செயலகத்தில் கடமைபுரிகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


கண்ணோட்டம்

எங்களைப் பற்றி
எமது நோக்கு
மக்களுக்காக சிறந்ததோர் அரச சேவையை வழங்குதல்
எமது கொள்கை
நிபுணத்துவம் கொண்ட மனிதவள பயன்பாட்டுடன் கூடிய பிரதேச மட்டத்திலான உயர்ந்த நிர்வாக முறையினூடாக சிறந்ததோர் அரச சேவையை உறுதிப்படுத்தல்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவு பற்றிய ஓர் கண்ணோட்டம்
இப் பிரதேச செயலகப் பிரிவானது மட்டக்களப்பு நகரில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவானது 52 சதுர கிலோ மீற்றாகும். இப் பிரதேச செயலகமானது 45 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு காணப்படுகின்றது.
இதன் வடக்கெல்லையாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகப் பிரிவினையும் , தெற்கெல்லையாக கல்முனை - தமிழ் பிரதேச செயலகப் பிரிவினையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கே மட்டக்களப்பு வாவியினையும் எலல்லைகளாகக் கொண்ட ஓர் பிரதேச செயலகப் பிரிவாக உள்ளது. இப் பிரதேச செயலகப் பிரிவானது 65,808 மக்கள் தொகையினைக் கொண்டுள்ளது. இங்கு 19,585 குடும்பங்கள் காணப்படுகின்றது. இப் பிரதேச மக்களின் அன்றாட பிரதான ஜீவனோபாயத் தொழில்களாக விவசாயம், மீன்பிடி போன்றவை காணப்படுகின்றன.
30 கிராம சேவகர் பிரிவுகள் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலைத் தாக்கத்தால் பல்வேறு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டது. இதனால் பிரதேச மக்களின் வாழ்விடங்கள் பல சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப் பிரதேசமானது மணலும், களியும் சார்ந்த பிரதேசமாக காணப்படுகின்றது. மேட்டு நிலப்பயிர்ச் செய்கையும் , களிப் பிரதேச நிலங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நெற் பயிற்செய்கையும் நடை பெறுகின்றது.
இப் பிரதேச மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக 37 அரச பாடசாலைகளில்; 14,405 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
எதிர்காலத்தில் புனர் நிர்மான அபிவிருத்தித் திட்டங்களை தரமானதாக அபிவிருத்தி செய்வதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.
|
பெயர் |
பதவி |
இருந்து |
வரை |
|
திரு கே.விமலநாதன் |
இ.நி.சே III |
1991.04.19 |
1992.03.10 |
|
திரு எஸ்.அமலநாதன் |
இ.நி.சே III |
1991.11.19 |
1993.08.10 |
|
திரு கே.கருணாகரன் |
இ.நி.சே I |
1993.08.11 |
2000.01.02 |
|
திரு எஸ்.பாஸ்கரன் |
இ.நி.சே III |
2000.01.03 |
2006.05.05 |
|
திரு எஸ்.அருமைநாயகம் |
இ.நி.சே I |
2006.05.05 |
2006.12.30 |
|
திரு எஸ்.அருள்ராஜா |
இ.நி.சே I |
2007.01.31 |
2011.07.18 |
|
திரு.எஸ்.சுதாகர் |
இ.நி.சே III |
2011.07.19 |
2014.01.20 |
|
திரு எம்.கோபாலரெத்தினம் |
இ.நி.சே I |
2014.01.21 |
2017.02.27 |
| திரு. எஸ். ரங்கநாதன் | இ.நி.சே II | 2017.02.27 | 2017.08.15 |
| திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் | இ.நி.சே I | 2017.08.16 |









